ஐக்கிய தேசியக் கட்சி முன்னெடுத்துவரும் போராட்டம் காரணமாக கொழும்பு-நகர மண்டபம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றன.
இந்நிலையில், நகர மண்டப பகுதிகளின் ஊடாக பிரவேசிக்கும் வாகன சாரதிகள் தற்காலிகமாக மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.