2022 ஆம் கல்வி ஆண்டுக்கான, பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பாடப் புத்தகங்களில் 92 வீதமானவை விநியோகிக்கப்பட்டுள்ளதாக கல்வி வெளியீட்டுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்கு 2338.5 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும் அச்சிடப்பட வேண்டிய பாடப்புத்தகங்கள் அடுத்த தவணை ஆரம்பமாவதற்கு முன்பே அச்சிட்டு மாணவர்களுக்கு விநியோகிக்கப்படும் என்றும் கல்வி வெளியீட்டு திணைக்கள ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.