follow the truth

follow the truth

September, 19, 2024
Homeஉள்நாடுஇலங்கை தூதரகங்ககள் மூடப்பட்டமை குறித்து வெளிவிவகார அமைச்சு

இலங்கை தூதரகங்ககள் மூடப்பட்டமை குறித்து வெளிவிவகார அமைச்சு

Published on

சில நாடுகளில் இலங்கை தூதரக அலுவலகம் மற்றும் கொன்சியுலர் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளமை தற்காலிக ஏற்பாட்டின் அடிப்படையிலாகும் என்று வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் ஒரு வருட காலப்பகுதிக்குள் சம்பந்தப்பட்ட அலுவலகங்களை மீண்டும் திறப்பது தொடர்பாக கவனத்தில் கொள்ளப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இது தொடர்பில் தெரிவித்துள்ளார்.

நாட்டின் நிதி நிலைமையின் காரணமாக சிட்னி கொன்சியுலர் அலுவலகம் , ஈராக்கில் பாக்தாத் மற்றும் சுவிடனில் உள்ள தூதரக அலுவலகம் ஆகியவற்றை மூட வேண்டி ஏற்பட்டதாகவும் கூறினார்.

நாட்டின் பொருளாதார நிலைமையை அடிக்கடி கவனத்தில் கொண்டு இந்த அலுவலகம் குறித்து நடவடிக்கை மேற்கொள்வோம் எனவும் நாட்டின் நிதி நிலைமைய சீராகும் வரையில் தற்காலிக நடவடிக்கையாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளபம்டுள்ளதாக பட்டுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு கோரிக்கை

ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகும் வரை உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த...

ஜனாதிபதித் தேர்தல் – பாதுகாப்பிற்காக முப்படைகளும் இணக்கம்

ஜனாதிபதித் தேர்தலின் போது அமுல்படுத்தப்பட வேண்டிய இறுதி பாதுகாப்பு வேலைத்திட்டம் பொலிஸ்மா அதிபர்களுக்கு இன்று (19) வழங்கப்பட்டதாக பொது...

வாக்காளர் அட்டைகளை விநியோகிக்காமல் வைத்திருந்த தபால் உத்தியோகத்தர் பணி நீக்கம்

148 உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை உரிமையாளர்களுக்கு வழங்கப்படாத சம்பவம் தொடர்பில் தபால் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. புத்தளம் பகுதியிலுள்ள வர்த்தக...