டிஜிட்டல் அடையாள அட்டையை அறிமுகப்படுத்துவதற்கான ஒப்பந்தம் இன்று அமைச்சரவையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளது
இந்திய உதவியுடன் இலங்கையில் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டையை அறிமுகப்படுத்துவதற்கான ஒப்பந்தம் இன்று அமைச்சரவையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தொழில்நுட்ப அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதாக அதன் செயலாளர் ஜயந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் செயற்படும் டிஜிட்டல் அடையாள வேலைத்திட்டத்திற்காக இந்தியாவிடமிருந்து 8 மில்லியன் அமெரிக்க டொலர்களை உதவியாக வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் இணங்கியுள்ளதாக அரசாங்கத்தின் செயலாளர் தெரிவித்தார்.
இது தொடர்பான உடன்படிக்கைக்கு அண்மையில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்த நாட்டில் உள்ள தனிநபர்களின் பயோமெட்ரிக் தரவுகளின் அடிப்படையில் தனிநபர்களின் அடையாளத்தை சரிபார்ப்பதே இதன் நோக்கம்.
இந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் இந்நாட்டு பிரஜைகளுக்கு டிஜிட்டல் தேசிய அடையாள அட்டையை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் ஜயந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.