follow the truth

follow the truth

September, 17, 2024
Homeஉலகம்கொரோனா வைரஸின் தாக்கம் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை!

கொரோனா வைரஸின் தாக்கம் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை!

Published on

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் பல நாடுகளிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

அத்துடன், கொரோனா வைரஸ் தொடர்பில் தற்போது பல்வேறு போலியான தகவல்கள் பரவி வருவதாகவும் உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் குறைவடைந்து விட்டதாக கூறப்படுவது முதலாவது போலியான கருத்தாகும்.

அதேபோல், தற்போது உலகம் முழுவதும் பரவி வரும் ஒமைக்ரொன் கொவிட் திரிபானது பலவீனமான வைரஸ் திரிபாகும் என்பது மற்றைய போலியான கருத்தாகும்.

மேலும் இந்த கொவிட் திரிபானது கடைசி கொவிட் திரிபாகும் என்பது மற்றுமொரு போலியான கருத்தாகும்.இது போன்ற தவறான கருத்துகள் உலகவாழ் மக்கள் மத்தியில் ஒரு நிச்சயமற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது.

எனினும், கொவிட் தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கொவிட் தொற்றால் ஏற்படும் பாதிப்புகளை குறைத்துக்கொள்ள கொவிட் தடுப்பூசி பெற்றுக்கொள்வதே சிறந்த தீர்வாகும் என உலக சுகாதார ஸ்தாபனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் – இருவர் பலி

இந்தியா - கேரளாவில் மலப்புரத்தில் நிபா வைரஸ் பாதித்த 2வது நபர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியா...

மணிப்பூரில் இணைய சேவைக்குத் தடை

மணிப்பூரில் தொடர்ந்து பதற்றமான சூழல் நீடித்து வருவதால் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை இணைய சேவை தடை...

பெபின்கா சூறாவளி – சீனாவில் நூற்றுக்கணக்கான விமானங்கள் இரத்து

கிழக்கு சீனாவின் கடற்கரை பகுதியில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் பெபின்கா சூறாவளி மையம் கொண்டுள்ளது. இந்நிலையில், மோசமான வானிலை...