அடுத்த வருடத்திற்குள் 5000 கறவை மாடுகளை இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
இதேவேளை, திரவ பாலை பிரபலப்படுத்தும் வகையில் பாரியளவிலான பால் பண்ணைகளை நிறுவுவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
கண்டியில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே மஹிந்தானந்த அளுத்கமகே மேற்கண்டவாறு தெரிவித்தார்.