எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக பஸ் கட்டணம் அதிகரித்துள்ள நிலையில், ரயிலில் பயணிப்போரின் எண்ணிக்கை 40 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
போக்குவரத்தில் ஈடுபடும் ரயில்களின் பெட்டிகளை அதிகரிக்குமாறு பொறியியலாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதனிடையே, பயணிகளின் அதிகரிப்புக்கு ஏற்ப வசதிகளையும் மேம்படுத்துவது அவசியம் என ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.