follow the truth

follow the truth

October, 18, 2024
Homeஉள்நாடுமலம் கலந்த நீரை குடிக்கும் மக்கள்

மலம் கலந்த நீரை குடிக்கும் மக்கள்

Published on

தலவாக்கலை பெருந்தோட்ட கம்பனிக்கு சொந்தமான டெஸ்போட் லோன் டிவிசன் (கிரிமிட்டிய) கடை வீதியை அண்மித்த சுமார் 30 குடும்பங்களைச் சேர்ந்த குடியிருப்பு மக்கள் தினமும் பயன் படுத்தும் குடிநீர் குழாய், கிணறு மிகவும் மோசமான நிலையில் உள்ளது .

இதில் பறவைகள், விலங்குகள்  மலம் கழிப்பதால் குறித்த நீர் குடிப்பதற்கு  உகந்ததாக இல்லை.

இது தொடர்பாக தோட்ட சுகாதார வெளிக்கள உத்தியோகஸ்தரிடமும், தோட்ட முகாமையாளரிடமும்  அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

எனினும், குறித்த நீரை பயன்படுத்தும் பொது மக்கள் தோட்டத்தில்  தொழில் செய்யாத படியால், இதை  சுத்தம் செய்ய முடியாது என அசமந்தமான  பதிலை தெரிவிப்பதாக  இப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

No description available.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளமாக ரூ.2,000 கொடுக்க வேண்டும்”

தற்போதைய ஜனாதிபதி அறிவித்த படி மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளமாக 2,000 ரூபாயினை பெற்றுக் கொடுக்க வேண்டும்...

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணி

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 16 வீரர்கள் கொண்ட அணிக்கு சரித் அசலங்க...

கொழும்பு கோட்டை – மட்டக்களப்பு புகையிரத சேவைகள் இரத்து

கொழும்பு கோட்டையில் இருந்து மட்டக்களப்பு வரை இன்று (18) நடத்தப்படவிருந்த அனைத்து ரயில் சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன. இன்று (18)...