ஜனாதிபதிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குமிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நாளை(15) மாலை இடம்பெறவுள்ளதாக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியுடனான சந்திப்புக்கான அழைப்பு தொடர்பில் கடந்த வாரம் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.
13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கான அழுத்தத்தை பிரயோகிக்குமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் கூட்டமைப்பு உள்ளிட்ட 07 கட்சிகள் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் நாளைய சந்திப்பு நடைபெறவுள்ளது.