follow the truth

follow the truth

October, 22, 2024
Homeஉள்நாடுவிசேட சுற்றுலா பொலிஸ் நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டம்!

விசேட சுற்றுலா பொலிஸ் நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டம்!

Published on

நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக நிறுவப்பட்டுள்ள விசேட சுற்றுலா பொலிஸ் நிலையங்களின் எண்ணிக்கையை 27 ஆக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளிடம் இருந்து சட்டவிரோதமாக பணம் பெறுவது மற்றும் பல்வேறு மோசடிகள் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட காவல்துறை ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

தற்போது நாடு முழுவதும் 15 சிறப்பு சுற்றுலா பொலிஸ் நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன.

இந்த புதிய சுற்றுலா பொலிஸ் நிலையங்கள் சுற்றுலாப் பயணிகளின் முக்கிய இடங்களுடன் இணைத்து அமைக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய தென் மாகாணத்தில் மிரிஸ்ஸ, நாரிகம ஆகிய இடங்களிலும் நுவரெலியா, பின்னவல மற்றும் எல்ல ஆகிய இடங்களிலும் இந்த விசேட சுற்றுலா பொலிஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

எதிர்காலத்தில் இவை பிரதேச பொலிஸ் சுற்றுலாப் பணியகம் என பெயர் மாற்றப்படும் என சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – 28 பேர் வைத்தியசாலையில்

அவிசாவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெவ்ரும் பிட்டிய வளைவுக்கு அருகில் இன்று (22) பிற்பகல் இரண்டு தனியார் பயணிகள் பஸ்கள்...

அரிசியின் நிர்ணய விலையில் எந்த மாற்றமுமில்லை

அரிசியின் நிர்ணய விலையில் எவ்வித மாற்றத்தையும் மேற்கொள்ள எதிர்பார்க்கவில்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். ஒழுங்கமைக்கப்பட்ட விவசாயத் திட்டத்தை...

பொதுத் தேர்தல் – தபால் வாக்களிப்பு விண்ணப்பங்கள் அதிகரிப்பு

கடந்த ஜனாதிபதி தேர்தலை விட எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு விண்ணப்பங்களின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக...