16 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் பதுளை – ஓயாவில் நீராட சென்ற நிலையில்,நீரில் மூழ்கி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று தமது நண்பர்களுடன், குறித்த ஓயாவில் நீராட சென்ற நிலையில், அவர் இவ்வாறு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர் பதுளை 3ஆம் கட்டைப் பகுதியைச் சேர்ந்தவராவார்.மேலும் ,சம்பவம் தொடர்பில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.