follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉலகம்பாகிஸ்தான் எல்லைக்குள் ஏவப்பட்ட இந்திய ஏவுகணை: இந்திய பாதுகாப்பு அமைச்சு விளக்கம்

பாகிஸ்தான் எல்லைக்குள் ஏவப்பட்ட இந்திய ஏவுகணை: இந்திய பாதுகாப்பு அமைச்சு விளக்கம்

Published on

பாகிஸ்தானுக்குள் இவ்வாரம் தவறுதலாக ஏவுகணையொன்றை ஏவியதாக நேற்று இந்தியா தெரிவித்துள்ளது. வழமையான பராமரிப்பின்போது தொழில்நுட்படக் கோளாறு காரணமாகவே இது நிகழ்ந்ததாக இந்தியா கூறியுள்ளது.

கடந்த புதன்கிழமை வழமையான பராமரிப்பின்போது தொழில்நுட்பக் கோளறால் ஏவுகணையொன்றாக தவறுதலாக ஏவப்பட்டதாக அறிக்கையொன்றில் இந்தியப் பாதுகாப்பமைச்சு தெரிவித்துள்ளது.

ஆயுதமில்லாத ஏவுகணையானது பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமபாத்திலிருந்து 500 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள கிழக்கு நகரான மியான் சன்னுவுக்கு அருகில் வீழ்ந்ததாக பாகிஸ்தான் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இவ் ஏவுகணையானது அணுவாயுதத்தைக் காவிச் செல்லக்கூடிய ரஷ்ய, இந்தியக் கூட்டிணைப்பில் தயாரிக்கப்பட்ட தரைத் தாக்குதல் பிரமோஸ் ஏவுகணையாக இருக்கலாமென தன்னை அடையாளங்காட்ட விரும்பாத சிரேஷ்ட பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சீன நாட்டு குழந்தைகளை வெளிநாட்டினர் தத்தெடுக்க தடை

தங்கள் நாட்டு குழந்தைகளை வெளிநாட்டினா் தத்தெடுக்க சீனா தடை விதித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இருந்தாலும், சீனாவிலுள்ள ரத்த உறவுகள்,...

ஆளே இல்லாமல் பூமிக்குத் திரும்பிய விண்கலம்

ஆளில்லா ஸ்டார்லைனர் விண்கலம் இன்று காலை பூமிக்குத் திரும்பியது. அந்த விண்கலத்தில் பூமிக்குத் திரும்ப வேண்டியிருந்த விண்வெளி வீரர்கள்...

குற்றத்தை ஒப்புக்கொண்ட ஜோ பைடனின் மகன் – 17 ஆண்டுகள் சிறை தண்டனை?

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் மகன் ஹண்டர் பைடன் மீதான வரி ஏய்ப்பு வழக்கு தொடர்பான விசாரணையில் தமது...