follow the truth

follow the truth

September, 19, 2024
Homeஉலகம்வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு மிரட்டல் விடுத்துள்ள ரஷ்யா

வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு மிரட்டல் விடுத்துள்ள ரஷ்யா

Published on

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்புக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் வெளிநாட்டு வாகன தொழிற்சாலைகள் தங்களது உற்பத்தியை நிறுத்தியுள்ளன.

உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷ்யா 2 வாரத்திற்கும் மேலாக போர் செய்து வருகிறது. ரஷ்யாவின் படையெடுப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ள உலக நாடுகள் பலவும் அதன் மீது பொருளாதார தடையை விதித்துள்ளன.

இதன் ஒரு பகுதியாக ரஷ்யாவில் இயங்கி வரும் வெளிநாடுகளை சேர்ந்த Toyota, Volkswagen, Jaguar, Land Rover, Mercedes-Benz, Ford, BMW ஆகிய ஆட்டோமொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது வாகன உற்பத்தியையும், ஏற்றுமதியையும் நிறுத்தி வைத்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து வெளிநாட்டு அந்நிறுவனங்கள் தங்களது வாகன தயாரிப்பை மீண்டும் தொடங்காவிட்டால், அவர்களது அனைத்து தொழிற்சாலைகளும் தேசியமயமாக்கப்படும் என ரஷ்யா பகிரங்கமாக மிரட்டியுள்ளது.

இதையடுத்து ஹுண்டாய் நிறுவனம், போரின் காரணமாக விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால் உற்பத்தியை நிறுத்தி இருப்பதாகவும், விரைவில் மீண்டும் உற்பத்தி தொடங்கப்படும் என தெரிவித்துள்ளது.

ரெனால்ட், அவ்டோவாஸ் போன்ற நிறுவனங்களும் உற்பத்தியை தொடங்கப்போவதாக தெரிவித்துள்ளன.

ஐரோப்பா மற்றும் மேற்குலக நாடுகளில் விற்பனை செய்யப்படும் பெரும்பாலான வாகனங்கள் ரஷியா மற்றும் உக்ரைனிலேயே உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்நிலையில் ரஷியாவின் இந்த மிரட்டல் உலக நாடுகளை அச்சம்கொள்ள செய்துள்ளது.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சிம்பாப்வேயில் கடும் வறட்சி – 200 யானைகளை கொன்று மக்களுக்கு உணவளிக்க திட்டம்

கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் வாட்டி வதைத்து வரும் கடும் வறட்சி காரணமாக ஆபிரிக்க நாடான சிம்பாப்வேயில்...

புதிய வகை கொவிட் தற்போது 27 நாடுகளில் பரவல்

எக்ஸ். இ. சி. புதிய வகை கொவிட் தற்போது 27 நாடுகளில் பரவியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. போலந்து,...

டொனால்ட் டிரம்பை சந்திக்கும் நரேந்திர மோடி

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது அமெரிக்க பயணத்தின் போது அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை சந்திக்க...