follow the truth

follow the truth

September, 17, 2024
Homeஉள்நாடுதாதியர் பல்கலைக்கழகத்தை விரைவில் ஆரம்பிக்க நடவடிக்கை

தாதியர் பல்கலைக்கழகத்தை விரைவில் ஆரம்பிக்க நடவடிக்கை

Published on

உத்தேச தாதியர் பல்கலைக்கழகம் விரைவில் ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். சுகாதார மற்றும் கல்வியமைச்சுக்களின் அதிகாரிகளுடன் தமது அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தாதியர் பல்கலைக்கழகத்தை உருவாக்குவதற்காக தயாரிக்கப்பட்டுள்ள நகல் சட்டமூலத்தை விரைவில் தன்னிடம் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்கவிற்கு அங்கு பணிப்புரை வழங்கினார்.

உயர்திறன் மிக்க சர்வதேச மட்டத்திலான தாதி உத்தியோகத்தர்களை நாட்டில் உருவாக்குவது இதன் நோக்கமாகும். இவ்வாறான பல்கலைக்கழகம் ஒன்றை நாட்டில் ஆரம்பிப்பது சுகாதார மற்றும் கல்வித்துறைகளுக்கு விசேட திருப்பு முனையாக இருக்கும் என சுகாதார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தாதியர் பல்கலைக்கழகம் ஒன்றை ஆரம்பிப்பது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சுபீட்சத்தின் தொலைநோக்கு கொள்கைப் பிரகடனத்தில் மக்களுக்கு வழங்கியுள்ள ஓர் உறுதிமொழியாகும். தற்போது நாட்டில் உள்ள 6 பல்கலைக்கழகங்களில் தாதியர் பட்டப் பாடநெறி இடம்பெறுகின்றது. இதுதவிர 17 கல்லூரிகள் ஊடாக தாதிப் பயிலுனர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகின்றது.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான...