follow the truth

follow the truth

February, 5, 2025
Homeஉள்நாடுஅரச நிறைவேற்று அதிகாரிகள் அடையாள பணிப்பகிஷ்கரிப்பு

அரச நிறைவேற்று அதிகாரிகள் அடையாள பணிப்பகிஷ்கரிப்பு

Published on

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரசின் நிறைவேற்று அதிகாரிகளின் ஒன்றிணைந்த கூட்டமைப்புக்கு சொந்தமான மற்றும் இணை சேவைகளில் ஈடுபடும் தொழிற்சங்கங்கள் பல இணைந்து இன்று அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளன.

சம்பள கொள்கையை மீறி தெரிவுசெய்யப்பட்ட சேவைகளுக்கு மாத்திரம் ஊதியம் மற்றும் கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றமை, பதவி உயர்வு செயன்முறையில் காணப்படும் முறைகேடுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகின்றது.

அரச சேவை பொறியியலாளர்கள் சங்கம், அரச ஆயுர்வேத வைத்திய அதிகாரிகளின் சங்கம், உள்நாட்டு இறைவரி தொழிற்சங்க ஒன்றியம், தொழில் ஆணையாளர்களின் சங்கம், கல்வி நிர்வாக சேவை தொழிற்சங்க ஒன்றியம் உள்ளிட்ட 17 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் இன்று பணிப்பகிஷ்கரிப்பிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, இன்று  காலை 10 மணியளவில் கோட்டை ரயில் நிலைய முன்றலில் எதிர்ப்பில் ஈடுபடவுள்ளதாக அரச நிறைவேற்று அதிகாரிகளின் ஒன்றிணைந்த கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

EPF பதிவு செய்ய புதிய நடைமுறை

ஊழியர் சேமலாப நிதிய சட்டத்தின் கீழ் அங்கத்தவர்களைப் பதிவு செய்யும் புதிய நடைமுறையொன்று தொழில் திணைக்களத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஊழியரொருவர் சேவையில்...

அடுத்த வாரம் டுபாய் செல்கிறார் ஜனாதிபதி

2025 உலக அரசு உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க எதிர்வரும் 10 ஆம் திகதி முதல்...

ஜப்பான் கடன் ஒப்பந்தங்களை திருத்த அமைச்சரவை அனுமதி

வெளிநாட்டுக் கடன் மீள்கட்டமைப்புச் செயன்முறைக்கமைய இலங்கை அரசுக்கும், ஜப்பான் அரசுக்கும் இடையிலான பரிமாற்றுப் பத்திரம் மற்றும் இலங்கை அரசுக்கும்...