follow the truth

follow the truth

September, 19, 2024
Homeஉள்நாடுஅரிசி ஆலைகளை சுற்றிவளைத்த நுகர்வோர் அதிகார சபை

அரிசி ஆலைகளை சுற்றிவளைத்த நுகர்வோர் அதிகார சபை

Published on

இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை அரிசியுடன் சிவப்பு அரிசியை கலந்து சிவப்பு, பச்சை அரிசியாக சந்தைக்கு விநியோகிக்கும் சட்டவிரோத வர்த்தக நடவடிக்கைகள் கண்டறியப்பட்டுள்ளன.

இரத்தினபுரி நுகர்வோர் சேவை அதிகாரிகளினால் அதுதொடர்பான நடவடிக்கைகள் கண்டறியப்பட்டுள்ளன.

எம்பிலிப்பிட்டிய, துன்கம மற்றும் மொரக்கெட்டிய ஆகிய பிரதேசங்களில் குறித்த அரிசி ஆலைகள் நடத்திச்செல்லப்பட்டுள்ளதுடன், அரிசி ஆலைகளை சுற்றிவளைத்த நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகள் அதன் உரிமையாளர்கள் இருவரை கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் கலப்படம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக கூறப்படும் அரிசி அரச இரசாயன பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டு, அதன் அறிக்கை பெறப்பட்டதன் பின்னர், மேலதிக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாக்கெடுப்பு, வாக்கெண்ணும் நிலையங்களுக்குள் செய்யக்கூடாதவை

வாக்கெடுப்பு நிலையங்களுக்குள் மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களுக்குள் தடை விதிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவினால் முக்கிய அறிவித்தல் ஒன்று...

விசேட தேவையுடையவர்களுக்கு வாக்களிப்பு நிலையங்களில் சிறப்பு ஏற்பாடுகள்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் விசேட தேவையுடையவர்கள் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ...

வாக்களிக்கச் செல்பவர்களுக்காக விசேட பஸ் சேவை

ஜனாதிபதித் தேர்தலுக்கு வாக்களிக்கச் செல்லும் பயணிகளுக்காக இலங்கை போக்குவரத்துச் சபை விசேட பஸ் சேவையொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது. வாக்களிப்பதற்காக கிராமங்களுக்குச்...