உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தமக்கு எதிரான வழக்கை வலுவிழக்க செய்யுமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு மேல் மாகாண சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
குறித்த மனு நீதிபதிகளான பிராங்க் குணவர்தன மற்றும் சமன் வீரமன் முன்னிலையில் இன்று எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.