சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் 08 பெண்கள் பாடசாலைகள் மற்றும் 02 கலவன் பாடசாலைகளும் தேசிய பாடசாலை அமைப்பில் இணைக்கும் நிகழ்வு அலரி மாளிகையில் இன்று (08) இடம்பெற்றது.
நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்தின் ஊடாக கல்வி அமைச்சின் அனுசரணையில் ´ஆயிரம் தேசிய பாடசாலைகள்´ வேலைத்திட்டத்தின் கீழ் இந்நிகழ்வு இடம்பெற்றது.
பெலிஅத்த புவக்தண்டாவ தம்மபால மகளிர் பாடசாலை, பிபில யஷோதரா மகளிர் பாடசாலை, தொம்பே தேவி பெண்கள் பாடசாலை, கல்முனை மஹமுத் பெண்கள் பாடசாலை, கெகிராவ வித்யார்த்த மகா வித்தியாலயம், கேகாலை சுவர்ண ஜயந்தி மகா வித்தியாலயம், ஹட்டன் கெப்ரியல் பெண்கள் பாடசாலை, பருத்தித்துறை மெதடிஸ்ட் உயர் பெண்கள் பாடசாலை, தங்கொடுவ பௌத்த மகளிர் பாடசாலை மற்றும் வலஹந்துவ ஜனாதிபதி பெண்கள் பாடசாலை ஆகியன இவ்வாறு தேசிய பாடசாலை அமைப்பில் இணைக்கப்பட்டன.
புதிதாக இணைக்கப்பட்ட 10 தேசிய பாடசாலைகளுடன் இலங்கையின் மொத்த தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கை 395 ஆக உயர்ந்துள்ளது.