follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுபொருளாதார பேரவையை நிறுவ தீர்மானம்

பொருளாதார பேரவையை நிறுவ தீர்மானம்

Published on

பொருளாதார பேரவையை வாராந்தம் கூட்டுவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.

பெருநிலைப் பொருளாதாரக் கொள்கை, கொவிட் – 19 பெருந்தொற்று நிலைமையின் பின்னர் தேசிய பொருளாதாரத்தின் செயற்பாடு, பொருளாதார மீள்கட்டமைத்தல், அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கை மற்றும் நிதிக் கொள்கைகளில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும் முக்கிய அபிவிருத்திக் கருத்திட்டங்கள் உள்ளிட்ட பொருளாதாரக் கொள்கைகள் தொடர்பாக மிகவும் ஆழமாகக் கலந்துரையாடி, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பேரவையின் ஆலோசனைகள், வழிகாட்டல்களுக்கமைய ஏற்புடைய அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் நியதிச்சட்ட நிறுவனங்கள் தேவையான சந்தர்ப்பங்களில், அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் இயைபுடைய தீர்மானங்களை நடைமுறைப்படுத்தவும், தேவைக்கேற்ப பொருளாதாரப் பேரவைக் கூட்டத்திற்கு போதுமான துறைசார் அறிவுகொண்ட கல்வியியலாளர்களை அழைக்கவும், ஜனாதிபதியினால் மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கப்படும் படிமுறைகள் தொடர்பாக அமைச்சரவையின் உடன்பாட்டை வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, பொருளாதார பேரவையின் கட்டமைப்பு ஜனாதிபதி, பிரதமர், வர்த்தக அமைச்சர், நெடுஞ்சாலைகள் அமைச்சர், நிதி அமைச்சர், விவசாய அமைச்சர், பெருந்தோட்டத்துறை அமைச்சர், மத்திய வங்கி ஆளுநர், ஜனாதிபதியின் செயலாளர், திறைசேரி செயலாளர் மற்றும் மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் ஆகியோரின் அடிப்படையில் அமையவுள்ளது.

 ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (தலைவர்)
 பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ
 வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன
 நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பர்னாந்து
 நிதி அமைச்சர் கலாநிதி பசில் ராஜபக்ஷ
 விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுக்கமகே
 பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரன
 இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால்
 ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத்
 திறைசேரி செயலாளர் எஸ். ஆர். ஆட்டிகல
 இலங்கை மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் தம்மிக்க நாணயக்கார

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...