follow the truth

follow the truth

February, 5, 2025
Homeஉள்நாடுஜனாதிபதி - சுதந்திரக் கட்சியினருக்கு இடையில் இன்று கலந்துரையாடல்

ஜனாதிபதி – சுதந்திரக் கட்சியினருக்கு இடையில் இன்று கலந்துரையாடல்

Published on

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் முன்னதாக முன்வைக்கப்பட்ட 15 யோசனைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளதோடு அவர்களில் 2 அமைச்சர்களும் 3 இராஜாங்க அமைச்சர்களும் அடங்குகின்றனர்.

இந்தநிலையில் இன்றைய கலந்துரையாடல் தொடர்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க, தற்போதைக்கு அரசாங்கத்திலிருந்து விலகும் தீர்மானம் இல்லை என்று குறிப்பிட்டார்.

எனினும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு இருக்கின்ற சில கரிசனைக்குரிய விடயங்கள் தொடர்பாக இந்த கலந்துரையாடலின் போது அவதானம் செலுத்தப்படும் என்று அவர் கூறினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

லசந்த வழக்கின் சந்தேக நபர்களை விடுவிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பான வழக்கில் மூன்று சந்தேக நபர்களை விடுவிக்க...

அரசு நெல்லுக்கான நிர்ணய விலையை அறிவித்தது

ஒரு கிலோ நெல்லுக்கு வழங்கப்படும் விலைகளை அரசாங்கம் இன்று (05) நெல் சந்தைப்படுத்தல் சபை மூலம் அறிவித்துள்ளது. விவசாயிகளிடமிருந்து நாளை...

இராணுவத்தின் புதிய தலைமைத் தளபதியாக மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க

இலங்கை இராணுவத்தின் புதிய தலைமைத் தளபதியாக மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். பெப்ரவரி 9 ஆம் திகதி முதல்...