மன்னார், தாராபுரம் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் 10 மில்லியன் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த நபர் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் மன்னார், எருக்கலமிப்பிட்டியைச் சேர்ந்த 36 வயதுடையவர். அவரிடமிருந்து 01 கிலோ 15 கிராம் ஐஸ் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மன்னார் கல்லடி தள்ளடி இராணுவ முகாமில் நேற்று இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.