நாளை முதல் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் மாணவர்களின் போக்குவரத்து தொடர்பிலும் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
சுமார் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் நாளைய தினம் பாடசாலைகளுக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர், அதிபர்களின் போக்குவரத்து பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டார்.