follow the truth

follow the truth

April, 20, 2025
HomeTOP1மேல் மாகாண கொவிட் நோயாளர்களுக்கு இன்று முதல் விசேட SMS இலக்கம் அறிமுகம்

மேல் மாகாண கொவிட் நோயாளர்களுக்கு இன்று முதல் விசேட SMS இலக்கம் அறிமுகம்

Published on

கொரோனா நோயாளர்களின் நோய் தன்மைக்கு ஏற்ப அவர்களை வகைப்படுத்தி சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்புதல் மற்றும் வீடுகளில் வைத்து முகாமை செய்தல் ஆகியவற்றுக்காக மேல் மாகாணத்தை உள்ளடக்கும் வகையில் புதிய முறைமை ஒன்று கொவிட் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய இன்று முதல் அமுலாகும் வகையில் துரித அழைப்பு மற்றும் குறுந்தகவல் சேவை முறைமை ஒன்று செயல்படுத்தப்பட உள்ளது.

அதற்கமைய நோயாளிகள் கீழ்வரும் தகவல்களை உள்ளீடு செய்து 1904 என்ற இலக்கத்துக்கு குறுந்தகவல் அனுப்பி வைக்க முடியும்.

சுவாசக் கோளாறுகளை கொண்டுள்ள நோயாளர்கள் A எனவும் காய்ச்சல் கொண்டுள்ள நோயாளர்கள் B எனவும் எவ்வித நோய் அறிகுறிகளும் கொண்டிராத நபர்கள் C எனவும் குறிப்பிட்டு சிறிய இடைவெளிவிட்டு வயது (இடைவெளி) தேசிய அடையாள அட்டை எண் (இடைவெளி) முகவரி என்பவற்றை உள்ளீடு செய்து மேற்கண்ட இலக்கத்துக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

குறுந்தகவல் ஊடாக கிடைக்கப்பெறும் தகவல்களுக்கு அமைய கொவிட் பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையம், நோயாளர்களை சிகிச்சை மையங்களுக்கு அனுப்புவது தொடர்பில் மருத்துவர்களுக்கு அறிவிக்கும் என அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

2019 ஏப்ரல் 21 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புகளின் 6வது ஆண்டு நிறைவையிட்டு முஸ்லிம் அமைப்புகளின் கூட்டு அறிக்கை

2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடந்த துயரமான ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு சம்பவங்களின் ஆறு ஆண்டுகளை இன்று...

கிறிஸ்தவ தேவாலயங்களில் வழிபாட்டிற்காக கலந்துகொள்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை

உயிர்த்த ஞாயிறு அன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் வழிபாட்டிற்காக கலந்துகொள்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு,...

ட்ரம்பின் பரஸ்பர வரி : அமெரிக்கா பறந்தது இலங்கை தூதுக்குழு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பால் அண்மையில் விதிக்கப்பட்ட வரிகள் தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட இலங்கையின் தூதுக்குழு ஒன்று அமெரிக்காவிற்கு...