கொவிட் தொற்றுக்கு எதிராக 3 தடுப்பூசிகளையும் பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு பொது இடங்களில் பிரவேசிப்பதற்கு தடை விதித்து சுகாதார பணிப்பாளர் நாயகம் வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்யுமாறு கோரி, திறந்த பல்கலைக்கழக சுதேச மருத்துவ விரிவுரையாளர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் இன்று அடிப்படை உரிமை மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.