சுகாதார தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் தொடர்பில் சுகாதார அமைச்சு உரிய கவனம் செலுத்தாத நிலையில், தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென சுகாதார நிபுணர் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், பணிப்புறக்கணிப்பு தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து நாளை தீர்மானம் மேற்கொள்ளப்படுமென சுகாதார நிபுணர் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்
சுகாதார தொழிற்சங்கங்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று காலை 8 மணி முதல் அடையாள பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் இரண்டு நாட்களுக்குள் தீர்வொன்று முன்வைக்கப்படாத நிலையில், எதிர்வரும் 10 நாட்களில் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்படுமெனவும் சுகாதார நிபுணர் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் மேலும் தெரிவித்துள்ளார்.