follow the truth

follow the truth

April, 21, 2025
Homeஉள்நாடுபுறக்கோட்டை அத்தியாவசிய மொத்த வர்த்தக நிலையங்களை திறக்குமாறு பந்துல கோரிக்கை

புறக்கோட்டை அத்தியாவசிய மொத்த வர்த்தக நிலையங்களை திறக்குமாறு பந்துல கோரிக்கை

Published on

நாட்டு மக்களின் நன்மைக் கருதி புறக்கோட்டை அத்தியாவசிய மொத்த வர்த்தக நிலையங்களை தொடர்ந்தும் திறந்து செயற்பாடுகளை முன்னெடுத்து செல்லுமாறு வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார்.

முழு நாட்டிற்கும் தேவையான அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்து விநியோகிக்கும் மையமாக புறக்கோட்டை மொத்த வியாபார சந்தை செயற்படுகின்றது.

இறக்குமதிகள் நிறுத்தப்படுவதாலும் துறைமுக சேவைகள் இடைநிறுத்தப்படுவதாலும் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் தேங்கியிருக்கும் சூழல் உருவாகும்.

இதனால், நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கான கேள்வி அதிகரித்து அதன் விலைகள் சடுதியாக உயர்வடையும் நிலையும் ஏற்படும்.

எனவே அத்தியாவசிய சேவைகள் கட்டாயம் முன்னெடுக்கப்பட வேண்டியதொன்றாகும்.

விருப்பத்தின் அடிப்படையில் எந்தவொரு வர்த்தக நிலையத்தையும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், அத்தியாவசிய வர்த்தக நிலையங்கள் திறந்திருக்க வேண்டும் என வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் ஏப்ரல் மாத இறுதிக்குள்

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. முன்னதாக ஏப்ரல்...

கொட்டாஞ்சேனையில் விசேட போக்குவரத்து திட்டம்

கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவு மற்றும் கடலோர பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட வீதிகளில் நாளை (21) போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார்...

இலங்கை போக்குவரத்து சபைக்கு சுமார் 1,300 மில்லியன் ரூபா வருமானம்

கடந்த 10 ஆம் திகதி முதல் நேற்று (19) வரையான காலப்பகுதியில் தேசிய போக்குவரத்து சபை சுமார் 1,300...