follow the truth

follow the truth

September, 20, 2024
Homeஉள்நாடுதங்கம் கடத்த முயன்ற இந்தியர்கள் இருவர் கைது

தங்கம் கடத்த முயன்ற இந்தியர்கள் இருவர் கைது

Published on

தங்கம் கடத்த முயன்ற இந்தியர்கள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் கழிவறைக்குள் சென்ற விமானப் பயணி ஒருவர், நீண்ட நேரமாக வௌியில் வராததையடுத்து, ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் குற்றப்புலனாய்வு அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட சோதனையில் சந்தேகநபர்கள் இருவரும் நேற்று (28) கைது செய்யப்பட்டுள்ளனர்..

இதன்போது, குறித்த பயணியிடமிருந்து 430 கிராம் நிறையுடைய 03 தங்கக்கட்டிகள் (1 கிலோ 290 கிராம்) கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

28 வயதான இந்திய பிரஜை ஒருவரே தங்கக் கட்டிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்ந்தும் நடத்தப்பட்ட விசாரணைகளில் சந்தேகநபருக்கு துபாயிலிருந்து நேற்று அதிகாலை வருகைதந்த 43 வயதான மற்றுமொரு இந்திய பிரஜையால் குறித்த தங்கக்கட்டிகள் வழங்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளுக்காக கைப்பற்றப்பட்ட தங்கத்துடன் சந்தேகநபர்கள் இருவரும் சுங்கப்பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தனியார் பிணைமுறி உரிமையாளர்களுடனான பேச்சுவார்த்தை வெற்றி

தனியார் பிணைமுறி உரிமையாளர்களுடனான பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ளதோடு நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து விடுவிப்பது தொடர்பான அனைத்து பேச்சுவார்த்தைகளும் வெற்றிகரமாக...

தபால் ஊழியர்கள் இருவரின் சேவைகள் இடைநிறுத்தம்

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் தொடர்பான கடமைகளை புறக்கணித்தமை காரணமாக தபால் ஊழியர்கள் இருவரின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஊழியர்கள்...

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் அடுத்த வாரம் மீண்டும் திறப்பு

தற்காலிகமாக மூடப்பட்ட ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 24ஆம் திகதி கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறக்கப்படும்...