follow the truth

follow the truth

September, 20, 2024
Homeஉள்நாடுஉக்ரேனில் உள்ள இலங்கைப் பிரஜைகளின் நிலை குறித்த தகவல்

உக்ரேனில் உள்ள இலங்கைப் பிரஜைகளின் நிலை குறித்த தகவல்

Published on

உக்ரேனில் நிலவுகின்ற முன்னேற்றங்கள் குறித்து வெளிநாட்டு அமைச்சு உன்னிப்பாக அவதானம் செலுத்தி வருவதாக வெளிநாட்டு அமைச்சுஅறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

உக்ரேனில் உள்ள இரண்டு (02) மாணவர்கள் உட்பட அண்ணளவாக நாற்பது (40) இலங்கைப் பிரஜைகளை உக்ரைன் – போலந்து எல்லை வழியாக வெளியேற்றும் பணியில் அமைச்சு தற்போது ஈடுபட்டுள்ளது. இந்த செயன்முறைக்கு வோர்சோ மற்றும் அங்காராவில் உள்ள இலங்கைத் தூதரகங்களால் வசதியளிக்கப்பட்டு வருவதுடன், அங்காராவிலுள்ள தூதரகம் உக்ரைனுக்கு ஒரே நேரத்தில் அங்கீகாரம் பெற்றுள்ளது.

உக்ரேனை விட்டு வெளியேறும் இலங்கைப் பிரஜைகளுடன் அங்காரா மற்றும் வோர்சோவில் உள்ள இலங்கைத் தூதுவர்கள் தொடர்ந்தும் நெருங்கிய தொடர்பைப் பேணி வருவதுடன், அவர்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கும் இலங்கைக்கு மீள நாடு திரும்புவதற்கும் வழிவகை செய்கின்றார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

உக்ரேனுடன் நில எல்லைகளைப் பகிர்ந்து கொள்ளும் நாடுகளில் உள்ள இலங்கைப் பிரஜைகளின் நிலைமையைக் கண்காணிப்பதிலும் வெளிநாட்டு அமைச்சு ஈடுபட்டுள்ளது. அங்கீகாரம் பெற்ற இலங்கைத் தூதரகங்கள் அந்தந்த நாடுகளில் உள்ள சம்பந்தப்பட்ட கௌரவத் தூதுவர்கள் மற்றும் இலங்கைப் பிரஜைகளுடன் தொடர்புகளைப் பேணி வருகின்றன.

பெலாரஸில் உள்ள எட்டு (08) பல்கலைக்கழகங்கள் / உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி கற்கும் 1,556 மாணவர்கள் உட்பட, ஏறத்தாழ 1,600 இலங்கைப் பிரஜைகளுடன் மொஸ்கோவில் உள்ள இலங்கைத் தூதரகம் தொடர்ந்தும் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வருகின்றது.

இலங்கை மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் தொடர்பாக, சம்பந்தப்பட்ட பல்கலைக்கழக அதிகாரிகள், மாணவர் மற்றும் பெற்றோர் குழுக்கள் மற்றும் பெலாரஸில் உள்ள ஏனைய சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் மொஸ்கோவில் உள்ள இலங்கைத் தூதுவர் நேரடித் தொடர்பில் ஈடுபட்டுள்ளார்.

சம்பந்தப்பட்ட இலங்கைத் தூதரகங்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிக் கொள்ளுமாறு பிராந்தியத்தில் உள்ள இலங்கைப் பிரஜைகளை அமைச்சு கேட்டுக்கொள்கின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தனியார் பிணைமுறி உரிமையாளர்களுடனான பேச்சுவார்த்தை வெற்றி

தனியார் பிணைமுறி உரிமையாளர்களுடனான பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ளதோடு நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து விடுவிப்பது தொடர்பான அனைத்து பேச்சுவார்த்தைகளும் வெற்றிகரமாக...

தபால் ஊழியர்கள் இருவரின் சேவைகள் இடைநிறுத்தம்

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் தொடர்பான கடமைகளை புறக்கணித்தமை காரணமாக தபால் ஊழியர்கள் இருவரின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஊழியர்கள்...

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் அடுத்த வாரம் மீண்டும் திறப்பு

தற்காலிகமாக மூடப்பட்ட ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 24ஆம் திகதி கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறக்கப்படும்...