follow the truth

follow the truth

September, 17, 2024
Homeஉள்நாடுமரதன்கடவல பகுதியில் விபத்து - இருவர் பலி

மரதன்கடவல பகுதியில் விபத்து – இருவர் பலி

Published on

திருகோணமலை-ஹொரவபொத்தானை பிரதான வீதி மரதன்கடவல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளார்.

இறத்மலை பகுதியிலிருந்து ஹொரவபொத்தானை நோக்கி மணல் ஏற்றிச் சென்ற லொறியும் ஹொரவபொத்தானையிலிருந்து திருகோணமலை நோக்கி சென்ற காரொன்றும் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இன்று காலை இடம்பெற்ற குறித்த விபத்தில், காரின் சாரதி மற்றும் அதில் பயணித்த ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

மேலும், உயிரிழந்தவர்களின் அடையாளங்கள் இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பிலான விசாரணைகளை ஹொரவபொத்தானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான...