திருகோணமலை-ஹொரவபொத்தானை பிரதான வீதி மரதன்கடவல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளார்.
இறத்மலை பகுதியிலிருந்து ஹொரவபொத்தானை நோக்கி மணல் ஏற்றிச் சென்ற லொறியும் ஹொரவபொத்தானையிலிருந்து திருகோணமலை நோக்கி சென்ற காரொன்றும் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இன்று காலை இடம்பெற்ற குறித்த விபத்தில், காரின் சாரதி மற்றும் அதில் பயணித்த ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
மேலும், உயிரிழந்தவர்களின் அடையாளங்கள் இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பிலான விசாரணைகளை ஹொரவபொத்தானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.