உலக சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை சுமார் 115 டொலர்களாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
எரிபொருளின் விலைகள் ஏறக்குறைய இரண்டு பவுண்டுகளால் அதிகரிக்கப்படும் என இங்கிலாந்தும் அறிவித்துள்ளதாகத் தெரிவித்தார். இதன்காரணமாக இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் எரிபொருள் விலை அதிகரிப்பு ஏற்படும் எனவும் முன்னாள் பிரதமர் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் போதே முன்னாள் பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் தோல்விக்கு முகங்கொடுக்கும் நிலையில் தற்போது மக்கள் மாற்று வழியை தேடிக்கொண்டிருப்பதாகவும் சர்வதேசத்தின் உதவியோடு ஐக்கிய தேசியக் கட்சியே முன்னோக்கிச் செல்லக்கூடிய ஒரே தெரிவு என்பதை மக்கள் தெளிவுபடுத்த வேண்டும் எனவும் திரு.விக்கிரமசிங்க தெரிவித்தார்.