தங்காலை – விதாரந்தெனிய பிரதேசத்தில் பொலிஸ் அதிகாரியொருவரை தாக்கி கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அதற்கமைய சம்பவத்துடன் தொடர்புடைய 6 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் வீரகெட்டிய மற்றும் சூரியவெவ ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
இதற்கு முன்னதாக கைது செய்யப்பட்ட நால்வரையும் எதிர்வரும் மாதம் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.