follow the truth

follow the truth

September, 21, 2024
Homeவிளையாட்டுஇலங்கை தொடரில் இருந்து சூர்யகுமார் யாதவ் மற்றும் தீபக் சாஹர் விலகல்

இலங்கை தொடரில் இருந்து சூர்யகுமார் யாதவ் மற்றும் தீபக் சாஹர் விலகல்

Published on

காயம் காரணமாக சூர்யகுமார் யாதவ் மற்றும் தீபக் சாஹர் இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் விளையாட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.

இந்நிலையில் முன்னைய தொடர்களில் சிறப்பாக செயல்பட்ட சூரியகுமார் யாதவ் மற்றும் தீபக் சாஹர்க்கு காயம் ஏற்பட்டுள்ளது.  ஈடன் கார்டன் மைதானத்தில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில்  பீல்டிங் செய்யும் போது சூரியகுமார் யாதவிற்கு கையில் காயம் ஏற்பட்டது.

இதனால் குறைந்தது மூன்று வாரங்கள் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுரை கூறியுள்ளனர்.   மேலும் தீபக் சாஹருக்கு தொடை தசையில் ஏற்பட்ட காயம் காரணமாக இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் இருந்து விலகியுள்ளார்.  இதனால் நேரடியாக அடுத்து ஐபிஎல் போட்டிகளில் சாஹர் விளையாட உள்ளார்.

இந்திய T20 அணி: ரோஹித் சர்மா (C), ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் (WK), வெங்கடேஷ் ஐயர், தீபக் சாஹர், ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சாஹல், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ், முகமது. சிராஜ், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், ஜஸ்பிரித் பும்ரா, அவேஷ் கான்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இலங்கை மகளிர் அணி

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐ.சி.சி டி20 மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இலங்கை மகளிர்...

உலகின் முதல் E-விளையாட்டுக்களுக்கான உலகக் கிண்ணப் போட்டிகள் வெற்றிகரமாக நிறைவு

கடந்த சில நாட்களாக சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் நடைபெற்று வந்த உலகின் முதல் E-விளையாட்டுக்களுக்கான உலகக் கிண்ணப்...

கமிந்து இலங்கை இன்னிங்ஸை காப்பாற்றினார்

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில், துடுப்பெடுத்தாடிய...