follow the truth

follow the truth

September, 17, 2024
Homeஉள்நாடுதேர்தல் ஆணைக்குழுவுக்கும் அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் இடையில் இன்று சந்திப்பு

தேர்தல் ஆணைக்குழுவுக்கும் அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் இடையில் இன்று சந்திப்பு

Published on

தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் அனைத்து அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் இடையில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமைகளில் உரிய சீர்திருத்தங்களை கண்டறிந்து தேவையான திருத்தங்களை பரிந்துரைக்கும் விசேட பாராளுமன்ற தெரிவுக்குழுவிடம் முன்வைத்துள்ள யோசனைகளுக்கு அரசியல் கட்சிகளின் ஆதரவை ஆணைக்குழு இதன்போது பெற்றுக்கொள்ளும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

மேலும் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படும்.

சுகாதார வழிகாட்டுதல்களுக்கு இணங்க, எந்த சந்தர்ப்பத்திலும் தேர்தலை நடத்த ஆணையம் தயாராக இருப்பதாக தேர்தல் ஆணையத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான...