ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பான விசாரணையை திசைதிருப்ப அரசாங்கம் மேற்கொண்டுள்ள மற்றுமொரு முயற்சி குளியாப்பிட்டி நீதவான் நீதிமன்றில் அண்மையில் தாக்கல் செய்த அறிக்கையின் மூலம் மேலேலுகிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கைக்கு எதிராக குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவில் இருந்தும் இந்த விடயமே தெளிவாகிறது.