follow the truth

follow the truth

September, 17, 2024
Homeஉள்நாடுமுகக்கவசம் அணிவது தொடர்பிலான அறிவித்தல்

முகக்கவசம் அணிவது தொடர்பிலான அறிவித்தல்

Published on

முகக் கவசத்தை கழற்ற முடியுமென சுகாதார திணைக்களம் எவ்வித அறிவிப்பையும் வெளியிடவில்லையென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்த்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏதாவது ஒரு ஊடகத்தில் இது தொடர்பான தகவல் பதிவிடப்பட்டிருந்தால் அது உண்மைக்கு புறம்பானதென அவர் தெரிவித்தார்.

இலங்கை இன்னும் முகக்கவசம் அணிய வேண்டிய மட்டத்திலேயே உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் நடவடிக்கை தற்போது குறைந்த மட்டத்தில் காணப்படுவதாக சுகாதார பிரிவு தெரிவிக்கிறது. சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி சகலரும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொண்டால் தற்போது காணப்படும் சட்டத்தை தளர்த்த முடியுமென அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, நாட்டில் ஒமிக்ரோன் திரிபு பரவி வருகிறது. வீட்டிலிருந்து வெளியில் வரும் போது தயவு செய்து முகக் கவசத்தை அணிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சுகாதார திணைக்களமோ, சுகாதார பிரிவோ இதுவரை முகக் கவசத்தை கழற்ற வேண்டுமென்ற தீர்மானத்திற்கு வரவில்லையென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்த்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான...