follow the truth

follow the truth

September, 17, 2024
Homeஉள்நாடுபஸ் வண்டிகளுக்கிடையில் ஏற்படும் மோதலை தவிர்க்க நடவடிக்கை

பஸ் வண்டிகளுக்கிடையில் ஏற்படும் மோதலை தவிர்க்க நடவடிக்கை

Published on

இலங்கை போக்குவரத்து சபை பஸ் வண்டிகள் மற்றும் தனியார் பஸ் வண்டிகளுக்கிடையில் ஏற்படும் மோதல் நிலையை தவிர்ப்பதற்காக GPS தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.

பொதுமக்களுக்கு பாதுகாப்பான சேவையை வழங்குவதே தமது நோக்கமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில தினங்களில் போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களும், தனியார் பஸ்களும் போட்டித்தன்மையுடன் சேவையில் ஈடுபட்டதால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டன.

இரு பஸ்களும் ஒரே நேரத்தில் சேவையில் ஈடுபடும் போது பொதுமக்களும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்கின்றனர். இந்நிலையில் GPS தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் அரசாங்கத்தின் உரிய பிரிவுகளுக்கும், அமைச்சுக்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் உரிய தீர்வொன்றும் கிடைக்குமென்று எதிர்பார்ப்பதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான...