சாரதி ஆலோசகர்கள் மற்றும் உதவி சாரதி ஆலோசகர்களை பதிவு செய்வதற்கான எழுத்து மூலமான பரீட்சை எதிர்வரும் ஜூன் மாதம் கொழும்பில் இடம்பெறவுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதிபெற்ற பிரஜைகளிடமிருந்து எதிர்வரும் மார்ச் மாதம் 15ஆம் திகதி வரை விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளப்படவுள்ளன.