நாடு முழுவதும் இன்று (18) மின்விநியோக தடையை ஏற்படுத்த தீர்மானித்துள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.
இதன்படி, பிற்பகல் 2:30 முதல் மாலை 6:30 வரையான காலப் பகுதிக்குள் ஒரு மணிநேர மின்வெட்டை அமுல்படுத்தவுள்ளதாகவும் அத்துடன், மாலை 6:30 முதல் இரவு 10:30 வரையான காலப் பகுதிக்குள் 45 நிமிட மின்வெட்டை அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் தடை குறித்த பிரதேசங்களும் நேர அட்டவணை தொடர்பான விபரங்கள் இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.