follow the truth

follow the truth

September, 17, 2024
Homeஉள்நாடுஒன்லைன் ஊடாக ரயில் பயணச்சீட்டுகளை பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம்

ஒன்லைன் ஊடாக ரயில் பயணச்சீட்டுகளை பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம்

Published on

ஒன்லைன் ஊடாக ரயில் பயணச்சீட்டுகளை பெற்றுக்கொள்ளும் நடைமுறை இன்று (18) முதல் ஆரம்பமாகியுள்ளது.

இதற்கென கையடக்க தொலைபேசி செயலியொன்றை (Mobile App) தயாரித்துள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்தார்.

ஒன்லைன் ஊடாக கடனட்டையை பயன்படுத்தி ரயில் பயணச்சீட்டினை பெற்றுக்கொள்ள பயணிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இந்த செயலியினை மேம்படுத்தியதன் பின்னர் வீட்டிலிருந்தே மக்களால் ரயில் அனுமதிச் சீட்டினைப் பெற்றுக்கொள்ள முடியும் என ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்தார்.

எதிர்வரும் சில தினங்களில் அனைத்து ரயில் சேவைகளுக்குமான பயணச்சீட்டுகளை ஒன்லைன் ஊடாக பெற்றுக்கொடுப்பதே தமது நோக்கமென ரயில்வே பொது முகாமையாளர் மேலும் தெரிவித்தார்.

தற்போது ஒதுக்கப்பட்ட ஆசனங்களுக்காக மாத்திரமே இந்த சந்தர்ப்பத்தினை வழங்கியுள்ளதாகவும் எதிர்காலத்தில் புதிய கட்டமைப்பொன்றை அறிமுகப்படுத்தியதன் பின்னர் பயண அட்டை (Travel Card) மூலமாக செயற்படுத்தக் கூடிய வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான...