follow the truth

follow the truth

September, 20, 2024
Homeஉள்நாடுஅனைத்துச் சேவைகளையும் தொழில்நுட்பத்தின் ஊடாக முன்னெடுக்க நடவடிக்கை

அனைத்துச் சேவைகளையும் தொழில்நுட்பத்தின் ஊடாக முன்னெடுக்க நடவடிக்கை

Published on

2022ஆம் ஆண்டு இறுதிக்குள், நாட்டின் அனைத்துப் பிரஜைகளுக்கும் டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்குவதற்கான பின்புலம் அமைக்கப்படும் என்று, இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரும் டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று காலி தொழில்நுட்ப பூங்காவை பார்வையிட்டதன் பின்னர் அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கிராம சேவகர் உட்பட ஜனாதிபதியின் செயலாளர் வரையான அனைத்து அரச சேவைச் செயற்பாடுகளும் டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் தொடர்புபடுத்தப்படும் என்றும் ஜனாதிபதி அவர்கள் வழங்கியுள்ள இலக்குகளைப் பூர்த்தி செய்து, எதிர்வரும் 30 மாதக் காலப்பகுதிக்குள் அனைத்துச் சேவைகளையும் இணையத் தொழில்நுட்பத்தின் ஊடாக முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கும் பணிகள் நாளை ஆரம்பம்

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும் பணிகள் நாளை காலை முதல் ஆரம்பிக்கப்படும்...

உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு கோரிக்கை

ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகும் வரை உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த...

ஜனாதிபதித் தேர்தல் – பாதுகாப்பிற்காக முப்படைகளும் இணக்கம்

ஜனாதிபதித் தேர்தலின் போது அமுல்படுத்தப்பட வேண்டிய இறுதி பாதுகாப்பு வேலைத்திட்டம் பொலிஸ்மா அதிபர்களுக்கு இன்று (19) வழங்கப்பட்டதாக பொது...