யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதான வீதியில் நெல்லியடி பிரதேசத்தில் வைத்து 70 லட்சம் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படையினர் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் நேற்று முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து 818 கிராம் அளவிலான ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் பருத்தித்துறை மற்றும் காங்கேசன்துறை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 22 மற்றும் 23 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.