follow the truth

follow the truth

September, 17, 2024
Homeஉள்நாடுகொரோனா தடுப்பூசி அட்டை வைத்திருக்க தேவையில்லை!

கொரோனா தடுப்பூசி அட்டை வைத்திருக்க தேவையில்லை!

Published on

சிவனொளிபாதமலைக்கு இரத்தினபுரி, பலாங்கொடை, குருவிட்ட பிரதேசங்கள் வழிகளின் ஊடாக யாத்திரை செல்லும் யாத்திரிகர்கள் கொரோனா தடுப்பூசி அட்டை வைத்திருக்க வேண்டியது அவசியமில்லை என இரத்தினபுரி மாவட்ட செயலாளர் மாலினி லொகுபோதாகம தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

சிவனொளிபாதமலைக்கு யாத்திரை மேற்கொள்வோர் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி பேணுதல் உள்ளிட்ட முறையான சுகாதார விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

எவ்வாறாயினும், கொரோனா தடுப்பூசி அட்டைகளை உடன் வைத்திருக்க வேண்டியது கட்டாயமில்லை என தெரிவித்த மாலினி லொகுபோதாகம, தடுப்பூசி அட்டை உடன் இருப்பது பாதுாப்பானது எனவும் தெரிவித்தார்.

மேலும் , பொதுமக்கள் அனைவரும் சுகாதார பிரிவு வழங்கியுள்ள ஆலோசனைகளுக்கு அமைவாக சுகாதார வழிமுறைகளை முறையாக கடைபிடிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான...