திருகோணமலை பன்குளம் பகுதியில் யானை ஒன்று குழிக்குள் விழுந்து சுமார் 6 நாட்களாக மீட்கப்படாத நிலையில் உயிருக்கு போராடி வருவதாக பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்.
பன்குளம் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னாள் உள்ள வாய்க்கால் ஒன்றினுள் இவ்வாறு குறித்த யானை வீழ்ந்து உயிருக்கு போராடி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
எனவே, வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் இது தொடர்பில் உரிய அவதானம் செலுத்த இந்த யானையை மீட்குமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.