follow the truth

follow the truth

September, 20, 2024
Homeஉள்நாடுபயங்கரவாத தடைச் சட்ட திருத்த சட்டமூலத்திற்கு எதிராக மனு தாக்கல்

பயங்கரவாத தடைச் சட்ட திருத்த சட்டமூலத்திற்கு எதிராக மனு தாக்கல்

Published on

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கான சட்டமூலத்தின் சில சரத்துகள், அரசியலமைப்பிற்கு முரணானது என தீர்ப்பளிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் விசேட மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மாற்று கொள்கைக்கான நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரணவமுத்து இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

இந்த சட்டமூலம் சட்டமாக நிறைவேற்றப்பட வேண்டுமாயின், பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையுடன் அல்லது வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதனால் சட்டமூலத்தின் 2, 3, 4, 6, 10, 11 மற்றும் 12 ஆகிய உறுப்புரைகள் அரசியலமைப்புக்கு முரணானது என தீர்ப்பளிக்குமாறு மனுதாரர் நீதிமன்றத்திடம் கோரியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை மீண்டும் நடத்தப்படுமா?

இவ்வருடம் நடைபெற்ற 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் பரீட்சை வினாத்தாள் கசிந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்தால், பரீட்சையை...

மேல்மாகாண வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் சாளரங்கள் இன்று மூடப்படும்

மேல்மாகாணத்தில் வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் அனைத்து அனுமதிச் சாளரங்களும் இன்று மூடப்படும் என மேல்மாகாண சபை தெரிவித்துள்ளது. ஏனெனில் ஜனாதிபதி...

“கஞ்சிபானியின் பெயரே KPI என எழுதப்பட்டது”

அதுருகிரியவில் உள்ள பச்சை குத்தும் நிலையத்தில் சுரேந்திர வசந்த பெரேரா அல்லது கிளப் வசந்த உள்ளிட்ட இருவரை கொல்ல...