தொல்லியல் கட்டளைச் சட்டம் திருத்தப்படவுள்ளதாகவும் இது தொடர்பான வரைபு தயாரிக்கப்பட்டு வருவதாகவும் தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், சிரேஷ்ட பேராசிரியர் அனுர மனதுங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தொல்லியல் கட்டளைச் சட்டம் மற்றும் தண்டனைச் சட்டத்தின் பிரகாரம், தொல்பொருட்களைத் திருடும் நபருக்கு 3 வருட சிறைத்தண்டனை அல்லது 500,000 ரூபா அபராதம் விதிக்கப்படலாம் என்பதுக் குறிப்பிடத்தக்கது.