இளைஞர்களை இலக்கு வைத்து சட்டவிரோதமாக விருந்துபசாரங்களை நடத்தும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸாா் தெரிவித்துள்ளனா்.
சகல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் இதுதொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளனா்.
இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
காதலர் தினத்தை முன்னிட்டு இளைஞர்களை இலக்கு வைத்து வெவ்வேறு இடங்களில் விருந்துபசாரங்களை ஏற்பாடு செய்து, அவற்றினூடாக போதைப்பொருள் வியாபாரம் செய்வதற்கு வியாபாரிகள் ஒன்றிணையக் கூடும். அதனால், தமது பொலிஸ் பிரிவுகளில் சந்தேகத்துக்கிடமாக குறிப்பாக போதைப்பொருள் பயன்படுத்தும் விருந்துபசாரங்கள், போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படும் இடங்கள் போன்ற இடங்களை உடனடியாக சுற்றிவளைக்குமாறு நாடுபூராகவுமுள்ள சகல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் அறிவித்துள்ளோம்.
அதேபோன்று, அவ்வாறான இளைஞர்களை தேடிப்பார்த்து உடனடி நடவடிக்கை எடுக்குமாறு ஒவ்வொரு பொலிஸ் பிரிவுகளிலும் கடமையாற்றும் புலனாய்வு அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளாா்.