1 கிலோ 10 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஐந்து சந்தேகநபர்கள் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் பேசாலை மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளை வசிப்பிடமாகக் கொண்ட 21 மற்றும் 29 வயதுடையவர்களாவர்.
சந்தேகநபர்கள் இன்று மன்னார் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
மன்னார் பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.