follow the truth

follow the truth

October, 22, 2024
Homeஉள்நாடுவத்தேகம எல்கடுவ வீதியில் விபத்து - ஒருவர் பலி

வத்தேகம எல்கடுவ வீதியில் விபத்து – ஒருவர் பலி

Published on

வத்தேகம எல்கடுவ வீதியின் 2/3 பாலத்திற்கு அருகில் வத்தேகம நோக்கி பயணித்த லொறி ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் இருந்து விலகி சுமார் 30 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த லொறியில் பயணித்த நபர் ஒருவர் வத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

எனினும், லொறியின் சாரதி தொடர்பில் எவ்வித தகவல்களும் இதுவரை கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த நபர் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில் வத்தேகம வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – 28 பேர் வைத்தியசாலையில்

அவிசாவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெவ்ரும் பிட்டிய வளைவுக்கு அருகில் இன்று (22) பிற்பகல் இரண்டு தனியார் பயணிகள் பஸ்கள்...

அரிசியின் நிர்ணய விலையில் எந்த மாற்றமுமில்லை

அரிசியின் நிர்ணய விலையில் எவ்வித மாற்றத்தையும் மேற்கொள்ள எதிர்பார்க்கவில்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். ஒழுங்கமைக்கப்பட்ட விவசாயத் திட்டத்தை...

பொதுத் தேர்தல் – தபால் வாக்களிப்பு விண்ணப்பங்கள் அதிகரிப்பு

கடந்த ஜனாதிபதி தேர்தலை விட எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு விண்ணப்பங்களின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக...