இரும்பின் விலை திடீரென அதிகரித்துள்ளமையினால், தாம் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக கட்டட நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது இரும்பு மெற்றிக் டன் ஒன்றின் விலையானது 2 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாவாக அதிகரித்துள்ளதென இரும்பு இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உலக சந்தையில், இரும்பின் விலை உயர்வுக்கு டொலர் பற்றாக்குறையே பிரதான காரணம் என அவர்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.