follow the truth

follow the truth

October, 22, 2024
Homeஉள்நாடுவைத்தியர் ஷாஃபி ஷிஹாப்தீன் மனு பரிசீலனைக்கு திகதியிடப்பட்டது

வைத்தியர் ஷாஃபி ஷிஹாப்தீன் மனு பரிசீலனைக்கு திகதியிடப்பட்டது

Published on

குருணாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஷாஃபி ஷிஹாப்தீன் தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் 17ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கருத்தடை சத்திர சிகிச்சை செய்ததாக போலியான குற்றச்சாட்டில் தனக்கு  கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாகவும் மேலும், தமக்கு நிலுவை சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டும் என உத்தரவிடக்கோரி, வைத்தியர் ஷாஃபி இந்த நீதிப் பேராணை மனுவை தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவின் பிரதிவாதிகள் சார்பில் நீதிமன்றில் முன்னிலையான மேலதிக பிரதி மன்றாடியார் நாயகம், இந்த மனுவும் அது சார்ந்த ஆவணங்களும் நேற்றைய தினமே தமக்கு கிடைக்கப்பெற்றதாகவும், இதனை பரிசீலிக்க தமக்கு கால அவகாசம் தேவைப்படுவதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், மேற்படி கோரிக்கையை பரிசீலித்த நீதியரசர்கள் அதற்கு அனுமதியளித்த அதேவேளை,  மனுவை எதிர்வரும் 17ஆம் திகதி பரிசீலனைக்கு எடுக்க உத்தரவிட்டனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – 28 பேர் வைத்தியசாலையில்

அவிசாவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெவ்ரும் பிட்டிய வளைவுக்கு அருகில் இன்று (22) பிற்பகல் இரண்டு தனியார் பயணிகள் பஸ்கள்...

அரிசியின் நிர்ணய விலையில் எந்த மாற்றமுமில்லை

அரிசியின் நிர்ணய விலையில் எவ்வித மாற்றத்தையும் மேற்கொள்ள எதிர்பார்க்கவில்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். ஒழுங்கமைக்கப்பட்ட விவசாயத் திட்டத்தை...

பொதுத் தேர்தல் – தபால் வாக்களிப்பு விண்ணப்பங்கள் அதிகரிப்பு

கடந்த ஜனாதிபதி தேர்தலை விட எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு விண்ணப்பங்களின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக...